ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்புவரை இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், வரும் 26ம் திகதியிலிருந்து 30வரை ஐந்து நாட்களில் ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

கண்டியிலிருந்து 26ம் திகதி புறப்படும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், 30ம் திகதி கொழும்பை வந்தடையும். இறுதியாக மே மாதம் முதலாம் திகதி பாரிய மேதின ஊர்வலமாக நிறைவடையுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

26-04-2022 : கண்டி – மாவனெல்லை
27-04-2022 : மாவனெல்லை – கலிகமுவ
28-04-2022 : கலிகமுவ – டனோவிட்ட
29-04-2022 : டனோவிட்ட – யக்கல
30-04-2022 : யக்கல -பேலியகொட

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles