நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தும் கொழும்பு கண்டி பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதேவேளை கொழும்பின் மஹரகம பகுதியிலும் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டியில் நூற்றுக்கணக்கான பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்குச் சட்டைத்தையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க, கலகமடக்கும் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பாய்ச்சி அடித்தும் முயற்சித்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.