பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுகிறது

இலங்கையில் வரும் 18ம் திகதி (18/04/22) முதல் பாடசாலை நேர்த்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதுமான பாடசாலை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் 2022ம் ஆண்டுக்கான முதலாம் தவணை வரும் 18ம் திகதியே ஆரம்பமாகின்றது. 2022 இல் அனுமதிக்கப்பட்ட 210 பாடசாலை நாட்களில், 139 நாட்களே மிகுதியாக உள்ளன.

இதனை நிவர்தி செய்யும் விதத்தில் பாடசாலை நேரத்தில் மேலதிகமாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பதால், கற்றல் நடவடிக்கைகளை இயன்றளவு கூடுதலாக வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles