பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை

இலங்கையில் பாடசாலைகளுக்கு வரும் 20ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் ஜீன் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்.

இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காவே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதல் இலங்கையின் பாடசாலை கல்விசார் நடவடிக்கைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles