சட்டவிரோத கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழியச் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் மிகவும் பரபரப்பாக இருக்கும் விமல் வீரவன்ச, அரசாங்கத்திலிருந்து பிரிந்து பாராளுமன்றில் தனித்து இயங்குவதுடன், அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவை நேரடியாகவே எதிர்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.