நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம், இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரரில் 1:1 என்ற விகிதத்தில் சமன் செய்துள்ளது.
(படம் : ESPN Cricinfo)
இந்திய அணியின் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமாகிய ரோஹித் ஷர்மா, 153 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காமல் 208 ஓட்ட்ங்களைப் பெற்றார். இது ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் பெறும் மூன்றாவது இரட்டைச் சதமாகும். இலங்கைக்கு எதிராக அவர் பெற்றிருக்கும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும்.
393 ஓட்ட்ங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதனால், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றார்.