ரோஹித் ஷர்மா​ அதிரடி, இந்திய அணி அபார வெற்றி

நட்சத்திர வீரர் ​ரோஹித் சர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம்​,​ இந்திய அணி இலங்கை​ அணிக்கெ​திரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம்​ இந்திய அணி​ மூன்று போட்டிகள் கொண்ட தொடர​ரில்​ 1:1 என்ற​ விகிதத்தில்​ சமன் ​செய்துள்ளது.

Rohit Sharma
(​படம் : ESPN Cricinfo)

​இந்திய அணியின் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமாகிய ​ரோஹித் ஷர்மா, 153 பந்துகளுக்கு ​முகம் கொடுத்து ஆட்டமிழக்காமல் ​208 ​ஓட்ட்ங்களைப் பெற்றார். இது ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் ​பெறும் மூன்றாவது இரட்டை​ச்​ சதமாகும். இலங்கைக்கு எதிராக அவர் ​பெற்றிருக்கும் ​இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும்.

393 ​​ஓட்ட்ங்க​ள்​ எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதனால், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. ​இலங்கை அணி​ சார்பாக ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் ​111 ​ஓட்டங்களைப் பெற்றார்.

Latest articles

Similar articles