இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

பங்களாதேஷ் டாக்காவில் நடைபெறும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கான போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் லக்மால் மூன்று விக்கெட்டுக்களையும், சமீர, பெரேரா,சந்தகன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

Embed from Getty Images

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக லக்மால் தெரிவு செய்யப்பட்டார்.

மும்முனை தொடரில் 15 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி முதலிடத்திலும், 9 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாம் இடத்திலும், 4 புள்ளிகளுடன் சிம்பாவே அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Latest articles

Similar articles