ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் ஜனாதிபதி

ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமனம் பெற்றுள்ளார்.

இளைய தலைமுறையினரால் அரசாங்கத்திற்கெதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ரணில் விக்ரம்சிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில்,
👉 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவர் பிரதமராவதும்,
👉 ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது ஒருவர் பிரதமராகப் பதவியேற்பதும் இதுவே முதற்தடவையாகும்

இலங்கை அரசியலின் நுனுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் நன்கு அறிந்த அரசியல்வாதியான ரணில் விக்ரமசிங்க மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் அதீத நம்பிக்கைக்குரியவராவார்.

நாட்டின் தற்போதைய சிக்கலான பொருளாதாரப் பிரச்சனையை ரணில் திறமையாகக் கையாளவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், நாட்டில் நடைபெற்று வரும் அகிம்சை வழி ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்ளப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles