ராஜபக்ச அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரி இளைஞர்கள், யுவதிகள் உட்பட மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கியுள்ளனர். இருப்பினும் அரசாங்கம் பதவி விலகவில்லை. அதற்கேற்றவகையில் பாராளுமன்றமும் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக இந்தியா வழங்கிய கடன் வசதி, வரும் மாதம் முதலாம் கிழமை முடிவடைய இருப்பதால், மீண்டும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.