இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
47 வயதாகும் ராகுல் காந்தி, கடந்த 19 வருடங்களாக அவரது தாயார் சோனியா காந்தி வகித்து வரும் கட்சித்தலைவர் பதவியை டிசம்பர் 16ம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
தனது பாட்டி இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர், தன் பள்ளிப் படிப்பை வீட்டிலிருந்தே முடித்த ராகுல் காந்தி, தன் பட்டப்படிப்பை புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ், ஹவார்ட் மற்றும் ரோலின்ஸ் பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார்.
ஜப்பானின் புகழ்பெற்ற அக்கிடோ (Aikido) நவீன தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டி வாங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.