ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கின் நிலை இன்று (28/02) மேலும் மோசமடையும் என்பதால், புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
18,000 இற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பல ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.