ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என பாராளுமன்றில் அரசதரப்பு அறிவித்துள்ளது.
6.9 மில்லியன் மக்களின் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தெரிவான கோத்தபாய ராஜபக்ச, எந்தவொரு சூழலிலும் பதவி விலக மாட்டார் என ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ பாராளுமன்றில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்றில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகராக உள்ள ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ, நேரம் அதிகம் எடுத்து பேசியது மட்டுமல்லாமல், மக்கள் விடுதலை முன்னணியினருடன் கடும் தர்க்கத்திலும் ஈடுபட்டார். மேலும் சுமந்திரனைப் பார்த்து ” நாடு இருக்கும் நிலையில் உங்களுக்கு தேர்தல் வேண்டுமா?” எனக் கேட்டும், கடும் தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.