அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவிகளைத் துறந்துள்ளதால், ஜனாதிபதி தற்காலிக அமைச்சரவை ஒன்றை அமைத்துள்ளார்.

இதில்,
தினேஷ் குணவர்த்தன – கல்வி அமைச்சு
ஜி.எல்.பீரிஸ் – வெளிநாட்டு அமைச்சு
அலி சப்றி – நிதி அமைச்சு
ஜொன்ஸ்ரன் பெர்னான்டோ – பெருந் தெருக்கள் அமைச்சு

ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

temporary cabinet srilanka

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Latest articles

Similar articles