இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவி விலகலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதவி விலகும் திகதி தொடர்பாக எவ்வித விபரமும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையடுத்து வரும் 13ம் திகதி(13/07) ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இதுவரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, மக்களுக்கு நேரடியாக தனது பதவி விலகல் தொடர்பாக எவ்வித தகவல்களையும் வழங்கவில்லையென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.