பதவி விலகுவதை உறுதி செய்தார் ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவி விலகலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதவி விலகும் திகதி தொடர்பாக எவ்வித விபரமும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையடுத்து வரும் 13ம் திகதி(13/07) ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இதுவரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, மக்களுக்கு நேரடியாக தனது பதவி விலகல் தொடர்பாக எவ்வித தகவல்களையும் வழங்கவில்லையென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles