பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் இன்று நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் பங்குபெற மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழமையாக ஒரு நாட்டை ஆளும் கட்சியின் மேதினக் கூட்டம் மிகப் பெரும் மக்கள் கூட்டத்துடன் இடம்பெறும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் மொட்டுக் கட்சியின் மேதினக் கூட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச பலத்தில், பலத்த முப்படையினரின் பாதுகாப்பில், குறைந்தளவு மக்களுடன் கூட்ட இடம்பெறும் சாத்தியமுள்ளது. இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கு பற்ற மாட்டார் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.