17 ஆண்டுகளின் பின்னர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்திய அழகி

118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்குபற்றிய 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, கடந்த நவம்பர் 18ம் திகதி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, 20 வயதான மனுஷி சில்லர் (Manushi Chhillar) உலக அழகிப் பட்டத்தை வென்றார். இவர் ஒரு மருத்துவதுறை மாணவியாவார்.

Manushi Chhillarபதினேழு வருடங்களின் பின்னர் இந்திய அழகியான மனுஷி சில்லர் பெற்ற இந்த உலக அழகிப்பட்டம் இந்தியாவுக்கு கிடைக்கும் ஆறாவது உலக அழகிப்பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles