இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டை இலங்கை சுகாதார அமைச்சு மீளப்பெற்றுள்ளது. தற்போது பரவலாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காலி முகத்திடலில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளதை கருத்திலெடுத்தே இந்த கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகத் தெரியவருகின்றது.