முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைவாட்ட சமூக தொடர்பாடல் பிரிவின் தலைவர் வணபிதா ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்க சென்றபோதே தான் அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வணபிதா ஜூட் கிரிசாந்த, தேவையேற்படின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரிக்கும்படியும் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவே பொறுப்பு என தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles