100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக இதுவரை 407 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.
கேரள மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி, வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரளா முதல்வர் ஆலோசனை நடத்திய பின்னர், இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படுமெனவும் மோடி அறிவித்துள்ளார்.