“நேஷன்” பத்திரிகையின்ஆசிரியராக செயற்பட்ட கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கருணாசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கருணாசேகரவிற்கு, இராணுவத்தின் மூன்றாவது உயர் பதவியான மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டிருந்தது.