ஈரான் அரசாங்கத்திற்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 326பேர் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஈரான் நாட்டின் மனித உரிமை அமைப்பான IHRNGO அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடுதழுவியரீதியில் 22 மாகாணங்களில் இடம்பெற்றுவரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் 43 சிறுவர்கள் மற்றும் 25 பெண்கள் உட்பட 326பேரை ஈரான் அரச படைகள் கொன்றுள்ளதாக IHRNGO அமைப்பு தெரிவித்துள்ளது.