திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (09/01) தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன், தேசியக் கொடியின் படத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதுடன், தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது