ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 19வது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாடு ஸ்திர நிலை அடைந்ததும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க நான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.