சமையல் எரிவாயு தட்டுப்பாடு, 3,000 வெதுப்பகங்கள் மூடல்

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடு பூராகவும் மொத்தம் 3,000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் என்பனவும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால், சமையல் எரிவாயு இறக்குமதிக்கான கடன் சான்றைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கையின் பிரதான சமையல் எரிவாயு இறக்குமதியாளர்களான ‘லா(f)ப்ஸ்’ மற்றும் ‘லிற்றோ’ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles