காலிமுகத்திடலில் இராணுவம் குவிப்பு, சவேந்திர சில்வா களத்தில்

காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார். ஜனாதிபதியின் விசுவாசியான இராணுவத் தளபதி, பொதுஜன பெரமுனவின் காடையர்களிடமிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க களத்தில் இறங்கியுள்ளார் போலும்.

மேலும் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளதாலும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாலும் இராணுவ பிரசன்னம் மக்கள் மத்தியில் அச்ச நிலையை நிச்சயமாக உண்டாக்கும்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் சட்டத்தரணிகள் வேலியாக உள்ளதால், அங்கு மேலும் அமைதி நிலவுகிறது.

15/02/2020 பிரசுரமான செய்தி

Latest articles

Similar articles