எகிப்தின் சினாய் மாநிலத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுத்தாக்குதலில் 235ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.