2024இல் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாகாத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் மீட்சி இப்பொழுதே ஆரம்பமாகிறது” எனும் தொனிப் பொருளுடன் டொனால்ட் டிரம்ப் தனது மூன்றாம் முறை போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.
குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே இன்னும் மிகவும் பிரபலமாக உள்ள டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே ஒரு மணி நேரம் உரையாற்ரினார். இதன்போது டொனால்ட் டிரம்ப் “எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்ததுடன், “எமது நாடு வீழ்ச்சிப் பாதையில் உள்ளது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.