இலங்கையில் நேற்று (10/10/20) மட்டும்103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது சமூகத் தொற்றாக மாறக்கூடிய சந்தர்ப்பமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசு நிலமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக தெரிவித்துள்ளபோதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதுவரை மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக உயர்ந்துள்ளது.