கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படும்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கபடும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்று நிரூபத்தின் முக்கிய அம்சங்களாவன,

1- கோவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் முறைப்படி சீலிடப்பட்டு, உறவினர்களால் வழங்கப்படும் பிரேதப் பெட்டியில் வைக்கப்படும்.

2- சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணி நேரத்தினுள் தகனம் செய்யப்படவேண்டும்.

3- இவ்வாறு விடுவிக்கப்படும் சடலம், தகனம் செய்யப்படும் இடத்தைத் தவிர வேறு எந்தவொரு இடத்திற்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

4- சடலம் பதனிடப்படக் கூடாது (embalmed)

5- சடலம் தகனம் செய்யப்படும் இடம் உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளலாம். (நீதிமன்ற உத்தரவுகள் இல்லாத நிலையில் மாத்திரம்)

6- சடலம் உறவினர்களின் செலவில் தகனம் செய்யப்படவேண்டும்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை,

covid bodies procedure
covid bodies procedure
covid bodies procedure

Latest articles

Similar articles