இலங்கையில் கொரோனா நோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் 47 வயதான பெண் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மிக நீண்ட நாட்களின் பின்னர், இலங்கையில் கொரோனாவால் நிகழ்ந்துள்ள மரணம் இதுவாகும்.

அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த அப்பெண்மணி, ஏற்கனவே இருதய மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இலங்கையில் 12 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 2497 பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை உலகலாவியரீதியில் இதுவரை 23 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles