நேவி சம்பத்தை கைதுசெய்ய மக்கள் உதவியை நாடும் புலனாய்வுத்துறை

மஹிந்த ஆட்சியில் கொழும்பில் நடந்த பல கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ என்பவரைக் கைது செய்ய இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய கோட்டை நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதால், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மேற்படி சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ (இயற்பெயர் : பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபராவர்.

இயற்பெயர் : பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி
புனை பெயர் : ‘நேவி’ சம்பத்
கடற்படை பதவி : லெப்டினன்ட் கொமாண்டர்

பிறந்த திகதி : 09-02-1977
பிறந்த/வதிவிடம் : வெல்லம்பிட்டி / வெள்ளவத்தை !

‘நேவி’ சம்பத் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்தலாம்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு : 0112320141-45 அல்லது 0112422176 அல்லது 0112393621

 

Latest articles

Similar articles