தொடரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பரவலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியினரும் நாடு தழுவியரீதியில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (06/03) மாலை கொழும்பு ராஜகிரிய மற்றும் கொகுவல பிரதேசங்களில் மக்கள் மெழுகுவர்த்தியுடன் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் “அரசே வீட்டிற்குப் போ” “அரசியல்வாதிகளே மக்களின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்” போன்ற அரசிற்கெதிரான பதாதைகளையும் கையில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest articles

Similar articles