புதினம்

முடிவிற்கு வந்தது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்

நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால், கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவிற்கு வந்தது. இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 2.44 மடங்கு அல்லது 2.57 மடங்கு ஊதிய...

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையே மோதல், மூவர் காயம்

நேற்று (11/01) பிற்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல்வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதி...

மஹிந்த ஆட்சிக்கால திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை வேண்டும் – பிரதமர்

திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10/1) பாருளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (10/1) பாருளுமன்றத்தில் ஆற்றிய விஷேட உரையில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ - ISRO) தலைவராக கே.சிவன் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்திய சாதனைக்கு மூளையாக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்...

Meltdown and Spectre in 3 Minutes

https://www.youtube.com/watch?time_continue=186&v=syAdX44pokE  

மஹிந்த ஆட்சிக்கால ஊழல் மோசடி குறித்தும் விசாரணை – ஜனாதிபதி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா நேற்று (09/01) ஜனா­தி­பதி செய­ல­கத்தில் உள்­ளூ­ராட்சி தேர்­தல் தொடர்பாக சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்­போது மத்­திய வங்கி பிணைமுறி விவ­காரம் குறித்து பொது எதி­ர­ணி­யினர் உட்­பட அனை­வரும் பேசு­கின்­றனர். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் பல்­வேறு ஊழல் மோச­டிகள்...

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை – உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (09/01) தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன், தேசியக் கொடியின் படத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதுடன், தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உச்ச...

மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் கோர விபத்து, நால்வர் பலி

மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் நேற்றிரவு(09/01) கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள். காயமடைந்த சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா

வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார். சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தலமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஜனாதிபதியும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T 20 தலைவராக அஞ்சேலோ மத்தியூஸ்

சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சேலோ மத்தியூஸ் இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் T 20 தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை 'இலங்கை கிரிக்கட்' பிரதம அதிகாரி திலங்க சுமதிபால உத்யோகரீதியாக அறிவித்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னரே, இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு ஏகமனதாக அஞ்சேலோ மத்தியூசை அணித் தலைவராக தெரிவு...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img