வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார்.
சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தலமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஜனாதிபதியும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.