ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்று (09/01) ஜனாதிபதி செயலகத்தில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போது மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து பொது எதிரணியினர் உட்பட அனைவரும் பேசுகின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதுபற்றி எவரும் பேசுவதில்லை.
அவை தொடர்பான அறிக்கையும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.