புதினம்

அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்..

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வங்களுக்கு அரசியல் ஆதரவு பின்புலத்தில் இருப்பதாகவே தோன்றுகின்றது. கொழும்பு பஸ்ரியன் மாவத்தையில் பிரதி காவல்துறை மா அதிபரின் பணிமனைக்கு அருகில், துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் வழக்கு ஒன்றில் ஆஜரான...

டெங்கு அபாயம் – மே மாதத்தில் மட்டும் 6,684 நோயாளர்கள்

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் முதல் இரண்டு நாட்களில் 512 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த மே மாதத்தில் மட்டும் 6,684 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 2022ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 24,717 டெங்கு நோயாளர்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளனர். டெங்கு வைரசை...

மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்

2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துவகைகள் உட்பட 79 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களையே பங்களாதேஷ் வழங்கியுள்ளது. மேற்படி நன்கொடையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அவர்கள் கையளித்திருந்தார்.

யாழ் உடுவிலில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சல் தொற்றால் உயிரிழந்துள்ளார். கடும் காய்ச்சல் காரணமாக யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுமிக்கு, சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளார். இதேவேளை கடந்த வாரம் 11 வயது மாணவன் ஒருவர் கொழும்புத்துறை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்தில் ஒரு வாரத்தினுள் இரு சிறுவர்கள் டெங்கினால்...

ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன், பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி

அமைச்சரவை சம்பந்தமாக அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க திறமையானவர். அதனால்தான் அவரை பிரதமராக நியமித்துள்ளதுடன், மேலதிகமாக நிதி மற்றும் தேசிய கொள்கைகள் பதவியையும் அவருக்கு வழங்கியுள்ளேன் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தான் தனியாக நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க...

9 வயது சிறுமி கொலை, ஜனாதிபதி இரங்கல்

காணாமல் போயிருந்த பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் 9 வயது சிறுமி, அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவரை இனம் தெரியாதவர்கள் கொலை செய்த பின்னர், உடலை சதுப்பு நிலத்தில் வீசிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்க்ப்பட்டு வருகின்றன. மேலும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச...

நாட்டை விட்டு படகு மூலம் செல்ல முயற்சித்த 45பேர் கைது

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு டிரோலர் படகுகளில் இலங்கையிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சட்டவிரோதமாகச் சென்றுகொண்டிருந்தவர்களையே கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் தென் கடற்பரப்பில் வழிமறிக்கப்பட்ட படகில் 26 பேரும், மேற்கு கடற்பரப்பில் வழிமறிக்கப்பட்ட படகில் 19 பேரும் இருந்துள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, சிலாபம்,...

பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி

கடந்த 50 மாதங்களாக குடிவரவு தடுப்பு முகாமில் இருந்த நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகள் மீண்டும் அவர்கள் முன்னர் வசித்த குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிலேவிலாவிற்கு (Biloela) செல்வதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இடைக்கால வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிம் ஷாமல்ர்ஸ் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்படி குடும்பத்திற்கு இணைப்பு விசாவை வழங்கியுள்ளார். இதனடிப்படையில்,...

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழிய சிறை

சட்டவிரோத கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழியச் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் மிகவும் பரபரப்பாக இருக்கும் விமல் வீரவன்ச, அரசாங்கத்திலிருந்து பிரிந்து பாராளுமன்றில் தனித்து இயங்குவதுடன், அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவை நேரடியாகவே எதிர்த்து...

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியான ஒரு நிலையை கடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இந்தியா முடிந்தளவு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் மோடி அவர்கள் தெரிவித்தார். நேற்று(26/05) சென்னை நேரு விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் மோடி அவர்கள்,...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img