2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்துவகைகள் உட்பட 79 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களையே பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
மேற்படி நன்கொடையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அவர்கள் கையளித்திருந்தார்.