ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன், பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி

அமைச்சரவை சம்பந்தமாக அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க திறமையானவர். அதனால்தான் அவரை பிரதமராக நியமித்துள்ளதுடன், மேலதிகமாக நிதி மற்றும் தேசிய கொள்கைகள் பதவியையும் அவருக்கு வழங்கியுள்ளேன் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தான் தனியாக நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தான் பதவி விலகும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவையில் திறமையானவர்களை நியமித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வரும் வாரத்தினுள் அமைச்சரவை நியமனங்கள் முழுமைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles