அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை

பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால் இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வரும் 18ம் திகதிவரை அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதுடன், 18ம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் தென்மாகாண கவர்னரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஆராய்ந்த பின்னர்ரே நீதி மன்றம் மேற்படி தடையினை விதித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles