மாற்றம் நிச்சயமாகத் தேவை – சனத் ஜெயசூரியா

நடப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நிச்சயமாகப் பதவி விலக வேண்டும் என சனத் ஜெயசூரியா வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை இந்த அரசாங்கம் சரி செய்யும் என மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தினால் உரிய தீர்வினைப் பெற முடியாமல் போனதால்தான் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையில் நிச்சயமாக மாற்றம் ஒன்று தேவை எனக் குறிப்பிட்ட ஜெயசூரியா, தான் ஐந்து வருடங்கள் அரசியலில் இருந்ததாகவும், இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்தில் சனத் ஜெயசூரியா அண்மையில் பங்குபற்றியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles