சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரியா நேற்று (15/04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி, அரசாங்கத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இவரின் வருகை அங்கிருந்த பல இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்திருந்ததை இந்த கானொளி மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான மாவன் அத்தப்பத்து, ரொஷான் மஹாநாம ஆகியோர் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருந்ததுடன், வெளிப்படையாகவே அரசாங்கத்தை எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles