இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு தரப்பு உடன்படிக்கைகள் !!!

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னரே ஒரு பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் (JVP) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்துள்ளார்.

எவ்வித நிபந்தனைகளும் இன்றியே இந்தியா கடனுதவி செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தபோதிலும், அவரின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக அவசரமாக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன எனவும் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் கடனுதவி செய்த இந்தியாவுடன் ஐந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனில், 1.5 பில்லியன் டொலர் கடனுதவி செய்யவிருக்கும் சீனாவுடன் எத்தனை ஒப்பந்தங்களோ???

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles