கொழும்பு வைத்தியசாலை சிற்றூழியர்கள் மூவருக்கு கொரொனா தொற்று

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று நோயாளர்கள் விடுதியும் ஒரு சத்திரசிகிச்சைக் கூடமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மற்றைய ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா என்பதுபற்றி எவ்வித தகவல்களையும் அரசு வெளியிடவில்லை. இலங்கையின் பிரதான வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பகுதியளவிலான தற்காலிக முடக்கம் நோயாளர்களிற்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

Similar articles