இலங்கையில் மூன்றாவது மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு அங்கொட வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையைச் சேர்ந்த நபரே உயிர்ழந்தவராவார்.

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா உறுதியானது

இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் பத்து பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவரிலிருந்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரொனா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை யாழ் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles