பிந்திய இணைப்பு : பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நேற்று (28/10) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.