FIFA கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முறையாக இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
உலக மக்கள் கண்டுகளிக்கும்வகையில் இந்த வெற்றிக் கிண்ணம் 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதில் முதல் நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.
2018, ஜூன் மாதம் 14ம் திகதி மொஸ்க்கோவில் ஆரம்பமாகும் உலக கிண்ண முதல் போட்டியில் 32 அணிகள் பங்குபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.