ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட (WFP) அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லே இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
WFP அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லேவுடன் தான் தொலைபேசியில் உரையாடும்போது இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அழைப்பை ஏற்று டேவிட் பேஸ்லே விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.