மேல்மாகாணத்தில் 664 பேர் கைது

இலங்கையின் மேல்மாகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து, இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்படி கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மற்றைய மாகாணங்களில் கைதுகள் ஏதும் இடம்பெற்றதா போன்ற தகவல்கள் ஏதும் காவல்துறையினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

Latest articles

Similar articles