மேல்மாகாணத்தில் 664 பேர் கைது

இலங்கையின் மேல்மாகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து, இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்படி கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மற்றைய மாகாணங்களில் கைதுகள் ஏதும் இடம்பெற்றதா போன்ற தகவல்கள் ஏதும் காவல்துறையினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles