பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலில் மண்டியிடச் செய்ததாக கூறப்படும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக பதுளை காவல் நிலையத்தில் சட்டத்தரணியூடாக இன்று காலை சரணடைந்தார் என இலங்கை காவல்துறை பேச்சாளர் SP.ருவான் குணசேகரா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட முதலமைச்சர் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவருக்கு பிணை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.